ஆத்தூரில் வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூரில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2024-07-03 05:53 GMT
மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் நடைமுறை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 3 குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News