பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம்,பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பல கோரிக்கைகளை முன்நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-02-10 03:51 GMT

ஆர்பாட்டம்

பூந்தமல்லியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் உட்பட, பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், நீதிமன்ற வாயில் முன், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, சுகாதார வசதி, போதிய வாகனங்கள் நிறுத்த இடவசதி உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News