குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்பப் பெறக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் காலை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-21 08:44 GMT

விழுப்புரம் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் காலை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் காலை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவியல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும், வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குற்றவியல் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் அலாவுதீன், பிராங்க், பார்த்திபன், பிரகாஷ், முத் துலிங்கம், ஜெமினிராஜன், ராம்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் விக்கிரவாண்டி நீதிமன்றம் முன்பு லாயர் அசோசியேசன் சார்பில் சங்க தலைவர் சங்கரன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News