புகையில்லா போகி கொண்டாடுவோம் - மாவட்ட ஆட்சியர்

போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

Update: 2024-01-10 06:02 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
நமது முன்னோர்கள்  பொங்கல் திருநாளுக்கு  முன் வீட்டில்  உள்ள இயற்கை  சார்ந்த  தேவையில்லா  பொருட்களை எரித்து  பழையன கழிதலும், புதியன  புகுதலும் என்ற  அடிப்படையில் போகிப் பண்டிகையினை  கொண்டாடி வந்துள்ளனர்.  ஆனால், தற்பொழுது  போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக்,  செயற்கை இழைகளால்  தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்,  காகிதம்,  இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை  எரிப்பதால்  காற்று மாசு  ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.   வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள்  ஏற்படுவதோடு  விபத்துகளுக்கும்  காரணமாக உள்ளது.  மேலும், விமானங்கள்  வருகை  மற்றும்  புறப்பாடுகளில் தாமதம்  ஏற்படுகிறது. எனவே, போகிப் பண்டிகையின்  போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து  காற்றின் தரத்தை  பாதுகாக்க  பொதுமக்கள்  ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  எனவே, மாசில்லா தஞ்சாவூர் - புகையில்லா போகி கொண்டாடுவோம்... ! சுற்றுச் சூழலை பேணிக்காப்போம்...! என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News