வளர்ச்சிக்காக கனிமொழியை வெற்றி பெறச் செய்வோம் : மேயர் பேச்சு!

தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சிக்காக கனிமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம் என்று கவுன்சிலர்கள் மத்தியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

Update: 2024-04-05 05:46 GMT

மேயர் பேச்சு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசும்போது, "தூத்துக்குடி பாசத்திற்கும் போர்குனத்திற்கும் பெயர் பெற்றது. அது சுதந்திர போராட்ட காலத்திலும் தற்போதும் தொடர்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 75 சதவீதம் வாக்குப் பதிவு நடந்தால் திமுக 70 சதவீத வாக்குகளை திமுக பெறும் வகையில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றியுள்ளோம். மற்ற மாவட்ட மக்களை திரும்பி பார்க்கும் வைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டு காலத்தில் தூத்துக்குடி மாநகர் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மேலும் பல புதிய திட்டங்கள் வரவுள்ளது. எனவே, கனிமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிச் செய்வோம் என்று பேசினார்.
Tags:    

Similar News