மது பாட்டில் விற்றவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், ஏந்தலில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-23 10:02 GMT

கைது

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுதாகர், 45; என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில் விற்றது தெரியவந்த. இதனையடுத்து, சுதாகரை கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News