ஜோலார்பேட்டை அருகே மது விற்பனை: 3பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 13:30 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் மற்றும் கவுண்டர் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டதில்,
கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி வயது 60 மேல் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த சரசு வயது 55 மற்றும் அதே பகுதியை சேர்ந்த மனோன்மணி வயது 60 உள்ளிட்ட மூவரும் கைது செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது