கீழ்வேளூர் அடுத்த காக்கழனி கிராமத்தில் வைத்து சாராயம் விற்றவர் கைது

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி கிராமத்தில் கருவை காட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-09 05:12 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக் கழனி கிராமத்தில் கருவை காட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 8 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காக்க ழனி கிராமத்தில் கீழ்வேளூர் போலீஸ் சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே உள்ள கருவைக்காடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் விசாரணையில் அவர் வலிவலம் பகுதியை சேர்ந்த ரவி வயது 61 என்பதும் சாராயம் விற்றதும் தெரிய வந்தது இது தொடர்பாக ரவியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 55 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News