குமரி எல்லை பகுதியில் சாராய கடத்தல் ஒருவர் கைது

குமரி எல்லை பகுதியில் கொலை வழக்கில்  தொடர்புடையவர் கைது

Update: 2024-02-23 06:17 GMT
சாராயம் கடத்தியதாக கைதானவர்
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லை பகுதியான பாலராமபுரம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனைகள் செய்தனர். சோதனையில் வாகனத்தில் ஏழு லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கரத்தை ஓட்டி வந்த பாலராமபுரம் பகுதியை சேர்ந்த வினித் என்ற கண்ணனை (29) கைது செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில்  இவர் பிரபல ரவுடி சிங் என்ற அருண்ஜித் என்பவரை கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வினித்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News