உணவில் பல்லி கிடந்த விவகாரம் - பாஸட் புட் கடையை தற்காலிக மூட உத்தரவு.

Update: 2023-11-22 11:02 GMT

பப்ஸில் இருந்த பல்லி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ்கள் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று தனது மனைவி, மகன் உட்பட 3 பேரும் இந்த பப்ஸ்களை சாப்பிட்டுள்ளனர். 4வது பப்சை இவரின் மகன்  உட்கொள்ள எடுத்து பார்த்த போது இருந்த பொருளை கொத்தமல்லி என நினைத்து அதை தனியே எடுத்துள்ளார். அப்போது அது பல்லி என தெரிய வந்தது. உடனடியாக 3 பேரும் குன்னூர் அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்று இன்று காலை வீடு திரும்பினர். இந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அந்த கடைக்கு பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News