குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்த திருச்செங்கோடு எம் எல்

திருசெங்கோட்டையில் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் எம் எல் ஏ ஈஸ்வரன்.

Update: 2024-01-25 09:21 GMT

குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்த திருச்செங்கோடு எம் எல் 

பல இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் தனது இன்னுயிரை தியாகம் செய்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் நமக்கு என தனியாக ஒரு சட்ட நடைமுறைகளை கொண்டு வந்து இந்திய திருநாட்டில் உயர்ந்த சட்டமாம் இந்திய அரசியல் சாசனத்தை அமல்படுத்தப்பட்ட நாளை நாம் குடியரசு தின நாளாக கொண்டாடி வருகிறோம். இந்த இனிய நாளில் பொதுமக்கள் தங்களுக்கு இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமைகள் சென்றடைய வேண்டுமென்றும் அதேபோல இந்திய திருநாட்டிற்கு பொதுமக்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டுமென்றும் நினைவு கூர்ந்து அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கிராம பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுடைய கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமென்றும், நேர்மையான நிர்வாகம் நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என எம் எல் ஏ  ஈஸ்வரன் அவர்கள் செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்
Tags:    

Similar News