சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - 12 பேர் காயம்

மதுராந்தகம் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில்12 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-03-07 02:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நீதிமன்றம் அருகே சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு விருந்துக்கு பெரியவர்கள் 16 பேர், குழந்தைகள் எட்டு பேர் என 24 பேர் வேனில் பயணம் செய்த போது, வேன் மதுராந்தகம் நோக்கி வரும்பொழுது வேன் டயர் பஞ்சர் ஆகி அதை மாற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி செல்லும் பொழுது வேன் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.வேன் கவிழ்ந்த இடம் பள்ளமாக இருந்தாலும் குப்பை கிடங்காக இருப்பதினால் வேனில் பயணம் செய்த 24 பேரில் 6 குழந்தைகள்,4 பெண்கள், 2ஆண்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மதுராந்தகம் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News