மணலூர்பேட்டை அய்யனார் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-21 05:51 GMT
கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற அய்யனார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. இன்று அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணலூர்பேட்டை, திருக்கோவிலூர் ஜம்பை, சாங்கியம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News