ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.ஏராளமானோர் பங்கேற்பு.

Update: 2024-03-24 13:50 GMT
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் அருகே பெத்தாட்சி நகர், ராஜீவ் காந்தி நகர் பகுதியில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் யாக வேள்வியில் புனித நீர் வைத்து, வேத மந்திரங்களை முழங்கி, பூஜைகள் செய்தனர் சிவாச்சாரியார்கள். பின்னர், கும்பாபிஷேக விழா கமிட்டியினர் புனித நீரை தலையில் சுமந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு பூஜைகள் செய்து, சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். பிறகு மகா தீபாரதணையும் காட்டப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தது. நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், ஈசனத்தம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News