மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 3ம் தேதி துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 3ம் தேதி துவங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2024-01-01 06:38 GMT

மக்களுடன் முதல்வர் திட்டம்

மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புறத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளில் முதற்கட்டமாக பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று தீர்வு காணும் முகாம், வரும் 3ம் தேதி முதல், 30ம் தேதி வரை நடக்க உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், இம்முகாம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்து வரும் நாட்களில் குன்றத்துார், மாங்காடு நகராட்சிகளிலும், நகராட்சியை ஒட்டிய கிராம ஊராட்சிகளிலும், 30ம் தேதி வரை இம்முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News