மதுரையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் - பொதுமக்கள் பங்கேற்பு

மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்களில் 1063 மனுக்கள் பெறப்பட்டுள்ளது

Update: 2023-12-21 09:59 GMT

மக்களுடன் முதல்வர்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வார்டுகள் வாரியாக நடக்கவுள்ளது. நேற்று மண்டலம் 3க்கு உட்பட்ட 59, 60, 61 வது வார்டுகளுக்கு டி.பி.,ரோடு பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், மண்டலம் 4க்கு உட்பட்ட 44, 45, 46 வார்டுகளுக்கு சி.எம்.,ரோடு தெற்கு மண்டல அலுவலகத்திலும், மண்டலம் 2க்கு உட்பட்ட 1, 2 வார்டுகளில் அஞ்சல்நகர் திருமண மண்டபத்திலும் நடந்தன.மேயர் இந்திராணி பொன்வசந்த் மனுக்கள் பெற்றார். மொத்தம் 1063 மனுக்கள் வரப்பெற்றன. மண்டலத் தலைவர்கள் சவரணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார், அருணாசலம், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர்கள் பாமா, மகாலட்சுமி, தமிழ்ச்செல்வி, ஷர்மிளா, செந்தாமரை கண்ணன், அமுதா பங்கேற்றனர்.
Tags:    

Similar News