மேலக்கோட்டையூர் பப்ளிக் பள்ளியில் சிறார் - சிறுமியர் மன்றம்

மேலக்கோட்டையூர் பப்ளிக் பள்ளியில் சிறார் - சிறுமியர் மன்றம் துவக்கப்பட்டது.

Update: 2024-05-26 14:08 GMT

மேலக்கோட்டையூர் பப்ளிக் பள்ளியில் சிறார் - சிறுமியர் மன்றம் துவக்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் மாநகர் காவல், தாழம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, மேலக்கோட்டையூர் பப்ளிக் பள்ளியில் சிறார் - சிறுமியர் மன்றம் துவக்கப்பட்டது. விழாவில், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தாம்பரம் மாநகர் காவல் எல்லை இயங்கும், 15 சிறார் - சிறுமியர் மன்றங்களுக்கு இடையே, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 700 மாணவ - மாணவியருக்கு பதக்கம், விளையாட்டு உபகரணம், சான்றிதழை கமிஷனர் வழங்கினார். மேலும், விளையாட்டுத்துறையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
Tags:    

Similar News