எலக்ட்ரிக் கடை ஊழியர் மீது தாக்குதல் ஒருவர் கைது 

எலக்ட்ரிக் கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 4 நபர்கள் மீது வழக்கு ஒருவர் கைது.

Update: 2024-02-05 06:20 GMT

எலக்ட்ரிக் கடை ஊழியர் மீது தாக்குதல் ஒருவர் கைது 

குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் எலக்ட்ரிக் கடை யில் வேலை பார்த்து வருபவர் நவநீதகிருஷ்ணன் (25). இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர். வேலை பார்க்கும்  கடையின் மேல் பகுதியில் தங்கி  வருகிறார்.      இவர் வேலை பார்க்கும் கடையின் பின்பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுபின் ராஜ் (27). இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் நவநீதகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள குறுக்கு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பைக்குகளில் சுபின் ராஜ் உட்பட நான்கு பேர் வந்து நவநீதகிருஷ்ணனை தாக்கியுள்ளனர். இதில் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதை பார்த்த சுபின்ராஜ் உட்பட 3 பேரும் தப்பியுள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டம் சேரமங்கலத்தைச் சேர்ந்த விஜின் (30) என்பவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கி உள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நித்திரவிளை போலீசார் நவநீதகிருஷ்ணனை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் சுபின்ராஜ், விஜின் மற்றும் கண்டால் தெரியும்  இரண்டு பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, விஜினை கைது செய்தனர்.
Tags:    

Similar News