முன் விரோதத்தில் பெண்ணை தாக்கிய ஒருவர் கைது

தென்காசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை தாக்கிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-27 06:04 GMT
தென்காசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை தாக்கிய ஒருவர் கைது

தென்காசி மாவட்டம், கடையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாரி (42) என்பவரின் மகன் சக்தி (10) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (38) மகன் இசை முகிலனும் கபடி விளையாடிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு மாரியின் மகள் காயத்ரியை இசைமுகிலன் திட்டினார்.

பின்பு இருவரும் வாக்குவாதம் மேற்பட்டு ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கி கொண்டனர். காயம் அடைந்த மாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தொடர்ந்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News