காட்பாடி அருகே பைக்கில் விபத்து ஏற்படுத்திய நபர் கைது

காட்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-20 13:23 GMT

கைது செய்யப்பட்டவர்

 வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் ரோட்டில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இது சம்பந்தமாக திருவலம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியவர் பள்ளிகுப்பம் கீழ் மோட்டூரை சேர்ந்த பிரசாத் வயது 21 என தெரிய வந்ததால் அவர் மீது திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, பிரசாத்தை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News