சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மருதிப்பட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2024-02-16 07:57 GMT

கைது செய்யப்பட்டவர் 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிபட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சந்திரன் (43). இவரது மனைவி ஊருக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 10 வயதுள்ள சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில், சந்திரன் சொன்ன பதில் போலீசாரையே திடுக்கிட வைத்தது.

தனது மனைவிக்கு ஊருக்கு சென்ற இரண்டு வாரத்தில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மேலும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News