பூஜை மதுவில் விஷம் கலந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில் அருகே முன் விரோதத்தால் பூஜை மதுவில் விஷம் கலந்து ஒருவரை கொன்ற பூசாரியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2024-04-09 02:47 GMT

பைல் படம் 

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள  வடலிவிளை  சுடலைமாடசாமி கோவில் கடந்த மார்ச் -1 -ம் தேதி  பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த குவாட்டர் பாட்டிலில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் நடந்தது.    மது குடித்த அருள் மற்றும் செல்வகுமார் ஆகியோர்களில் செல்வகுமார் என்பவர் இறந்து விட்டார். அருள் என்பவர் தற்போதும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.     

இது சம்பந்தமாக கோட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில்  அருளும், செல்வ குமாரும் குடித்த குவாட்டர் பாட்டிலில் சுடலை மாட சுவாமி கோவிலில் பூசாரியாக வேலை செய்த சதீஷ் என்ற அஜி என்பவர் முன்விரோதம் காரணமாக குவாட்டர் பாட்டிலில் விஷத்தை கலந்து அருளிடம் கொடுத்துள்ளார் என்ற விவரம் தெரிய வந்தது. இதையடுத்து  அவரை கைது செய்து வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் சதீஷ் என்ற அஜி என்பவருக்கு காவல் நிலையங்களில் மேலும் பல வழக்குகள் உள்ளது.  தொடர்ந்து  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, ஆட்சியர் உத்தரவின்படி அஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,  பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News