மணலி: பெயிண்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து
மணலி புதுநகர் பகுதியில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
Update: 2024-06-17 03:03 GMT
தீ விபத்தால் வெளியேறிய கரும்புகை
மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.