யானை வாகனத்தில் மங்களநாயகி அம்மன் வீதியுலா
வைகாசி திருவிழாவை முன்னிட்டு மங்கலம்பேட்டை மங்கள நாயகி அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;
Update: 2024-05-19 06:37 GMT
மங்கள நாயகி அம்மன்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு ஐந்தாவது நாள் உற்சவமாக யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.