வணிக நிறுவனங்களில் மஞ்சப்பை விழிப்புணர்வு நடைபெற்றது

கடையநல்லூரில் வணிக நிறுவனங்களில் மஞ்சப்பை விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2024-03-12 05:33 GMT

மஞ்சப்பை விழிப்புணர்வு 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி நகராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன் ஆலோசனையின் பேரில் நகராட்சி ஆணையாளர் ஏற்பாட்டில் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்களும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News