மரக்காணம் : இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை.

மரக்காணம் அருகே கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது.

Update: 2023-12-26 02:37 GMT

கடல் ஆமை 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள தீர்த்தவாரி கடற்கரை ஓரம் விடுமுறை நாட்கள் பொது மக்கள் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக குளிப்பது வழக்கம், இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தீர்த்தவாரி கடற்பகுதிக்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று உள்ளனர். இந்த நிலையில் தீர்த்தவாரி கடலோரம் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கடலோர காவல் படையினருக்கும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஊர்க்காவல் படையினர் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமையின் பிரேதத்தை மீட்டு வனத்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆய்விற்கு பிறகு கடற்கரையின் மேடு பகுதியில் பாதுகாப்பாக கடல் ஆமையின் பிரேதத்தை புதைத்தனர்.
Tags:    

Similar News