சென்றாயபெருமாள் கோவிலில் மார்கழி மாத பொங்கல் விழா

சங்ககிரி அருகே சென்றாயபெருமாள் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-31 01:10 GMT

மார்கழி பொங்கல் விழா

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டியில் உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவிலில் பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது. வடுகப்பட்டியில் உள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில் மார்கழி மாத பொங்கல் திருவிழா டிசம்பர் 25ம் தேதி பூச்சொறிதழ் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து கோமாளி வேடம் அணிந்தவர் முன்னாள் செல்ல பின்னர் மாடு, பூசாரி, உற்ச மூர்த்தி சுவாமி பாப்பநாயக்கனூர், ஓட்டலாம்பட்டி, அண்ணாநகர், வடக்குகாடு, சென்னாக்கல்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு சென்று வந்தது.

இதனையடுத்து அருள்மிகு சென்றாயபெருமாள் சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரவு உற்சவ மூர்த்தி கருட வாகனத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து விட்டு சுவாமிகளை வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News