நன்செய் இடையார் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது

பரமத்தி வேலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நன்செய் இடையார் மாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது.

Update: 2024-03-11 06:05 GMT

கம்பம் நடும் விழா

பரமத்தி வேலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நன்செய் இடையார் மாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. பக்தர்கள் மாரியம்மன் கோயில் முன்பு உள்ள கம்பத்திற்கும் மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். திருவிழா இன்று தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும். 17-ஆம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், அன்று இரவு முதல் 27-ஆம் தேதி வரை அம்மன் தினந்தோறும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 24-ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், 25-ஆம் தேதி  காலை 65 அடி நீளமுள்ள பூ குண்டம் வெட்டப்பட்டு பூ போடப்படும் (தீ மூட்டப்பட்டும்).

அதனை தொடர்ந்து மதியம் 2- மணி அளவில் ராஜா கோயிலில் இருந்து மணிவேல் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றதும் தீமிதி விழா தொடங்கி இரவு 7-மணி வரை நடைபெறும். தமிழகத்திலேயே மிக நீளமான பூக்குண்டத்தில் தீ மிதிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண் பக்தர்களும், பெண்கள் பூ போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அன்று இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும்,26-ஆம் தேதி காலை கிடா வெட்டுதல், மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தலும், அழகு குத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27 -ஆம் தேதி காலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் எட்டுபட்டி ஊர் தர்மகர்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News