மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் கருவம்பாளையத்தில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சாதி ஆதிக்க வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-19 01:47 GMT

ஆர்ப்பாட்டம்  

திருப்பூர் நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம், சாதி ஆதிக்க வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து, தெற்கு மாநகர கமிட்டி சார்பில் திருப்பூர் கருவம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாநகர குழு உறுப்பினர் பி. பாலன் தலைமை வகித்தார். தெற்கு மாநகர செயலாளர் டி. ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், தெற்கு மாநகர குழு உறுப்பினர் எஸ். பானுமதி ஆகியோர் கண்டித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகர குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News