மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ஆதரவளித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியவர்களை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-20 04:43 GMT

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ஆதரவளித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியவர்களை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், தீண்டாமை ஒழிப் முன்னணியின் மாவட்டத் தலைவர் டி. சலோமி, செயலர் சி. ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், அ. ஸ்ரீதர், கே. சண்முகம், சி. அன்புமணவாளன், ஜி. நாகராஜன், சு. மதியழகன், துரை. நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நெல்லையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News