ஆண்டிபட்டி அருகே மனவேதனையில் கொத்தனார் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே மனவேதனையில் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-10 16:28 GMT

காவல் நிலையம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேல தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் கொத்தனார் ஆக வேலை செய்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி நுரையீரல் பாதிப்படைந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

மருத்துவம் செய்தும் குணமாகாததால் மிகுந்த மன வேதனையுடன் வாழ்ந்ததாகவும் இதனால் அவர் நேற்று வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

இதுகுறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News