அருட்பணி இயக்கம் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் !

ஊத்தங்கரை அருகே அருட்பணி இயக்கம் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-29 10:43 GMT

இரத்த தான முகாம்

ஊத்தங்கரை அருகே அருட்பணி இயக்கம் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் அருட்பணி இயக்கம் நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது இரத்த தான முகாம் UCMSI நிர்வாக இயக்குனர் பெனின் சாமுவேல் தலைமையில் அருட் பணியாளர்கள் திலீப்குமார், தினேஷ்,ஸ்டான்லி, சபரீசன், மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ரத்த வங்கி சார்பில் மருத்துவர் சுதர்சன், ஸ்ரீபால், சிங்காரப்பேட்டை மருத்துவர் அன்பரசி ஆகியோர் இரத்த தானம் கொடுக்க வந்த பொதுமக்களை பரிசோதனை செய்து இரத்த தானத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமை நடத்தினர் இம்முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகளை UCMSI அருட்பணி இயக்கத்தின் அருட் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர் முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்த அனைவருக்கும் பழரசம் மற்றும் அறுசுவை உணவுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News