ராசிபுரத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ, விக்னேஷ் மஹால், மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-12 06:47 GMT

முகாமில் கலந்து கொண்டவர்கள்

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ, விக்னேஷ் மஹால், மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கண்களைப் பரிசோதித்துக் கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜேசிஐ மண்டலம் 29 மண்டல துணை தலைவர் சுரேஷ், கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஜேசிஜ ராசிபுரம் மெட்ரோ தலைவர் சதிஷ் குமார், முன்னாள் மண்டல தலைவர் நிலாமணி கணேசன், முன்னாள் மண்டல இயக்குனர் பூபதி, செயலாளர் நீஜாம்முதின், லட்சுமிபிரியா, ஹேமலதா,சிவகுமார், சதிஷ் குமார், கார்த்தி மணிகண்டன், உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News