சிஐடியு சார்பில் மே தின பேரணி

பெரம்பலூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிஐடியு சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.

Update: 2024-05-02 03:53 GMT

மே தின பேரணி 

இந்திய தொழிற்சங்க மையமான சிஐடியு சார்பில் மே 1ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மே தின பேரணி நடைபெற்றது இதில், சி ஐ டி யு மாநில செயலாளர் ஜடா ஹெலன், தலைமையில் நடைபெற்ற பேரணி பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கி, மதனகோபாலபுரம் பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மே தினத்தின் முக்கியதுவம் குறித்தும் மேலும் தொழிலாளர்களுக்கு, அரசு வழங்கும் திட்டங்கள் அதில் தொழிலாளர்கள் பயன் பெறுவது குறித்தும் எடுத்துரைத்து பேசினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் .மாவட்ட செயலாளர் ரமேஷ், சி ஐ டி யு மாவட்டத் தலைவர் ரங்கநாதன், மாவட்ட செயலாளர் அகஸ்டின் சிஜடியு மாநில செயலாளர் ஜடா ஹெலன் மாவட்ட பொருளாளர் ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்வாரியம், ஆட்டோ தொழிற்சங்கம், சாலையோர பணியாளர்கள் என பல்வேறு துறையில், சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News