தாயிடம் ஆசி பெற்று பிரச்சாரத்தை துவக்கிய பாமக வேட்பாளர்

தாயாரிடம் ஆசி பெற்று தந்தை சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரச்சார பணியை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் துவக்கினார்.

Update: 2024-03-24 01:38 GMT

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளராக களம் காணும் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின் நேற்று தமது தாயார் சரோஜாவிடம் ஆசி பெற்று மருத்துவக்குடியில் உள்ள மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், தந்தையுமான கலியபெருமாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வித்தார்.

தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது, தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தனது பிரச்சாரப் பணிகளை தொடங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பிரச்சார பணிகளை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News