நாசரேத்தில் மதிமுக 31வது ஆண்டு துவக்க விழா

நாசரேத்தில் மதிமுக சார்பில் மதிமுக 31 வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-08 14:59 GMT

நாசரேத்தில் மதிமுக சார்பில்  31 வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.


தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மற்றும் நாசரேத் பேரூர் மதிமுக சார்பில் மதிமுக 31-வது ஆண்டு தொடக்கவிழா ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி ச.அரிகரன் தலைமையில் நடைபெற்றது. துவக்க விழாவினை முன்னிட்டு மாலையில் நாசரேத் சந்தி வீதியில் வெடி வெடித்து இனிப்பு கள் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் நாசரேத் நல்ல சமாரியன் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், நாசரேத் பேரூர் செயலர் ஐ.இராபர்ட், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன்,தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயுஜெபசிங், பொதுக்குழு உறுப்பினர் இரா.மோ கன்சிங், மாவட்ட பிரதிநிதி கேம்பல பாத் செ.அப்துல்காதர், தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மூ.பாபு செல்வன், தெற்கு மாவட்ட மாணவர் அணி துணைச் செயலர் செல்வாஸ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக துணைச் செயலர் லூ.மாசில்லா மணி, தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலர் ச.கணேசன்,தொண்டர் படை முத்து கிருஷ்ணன், கட்டாரிமங்கலம் சீயோன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News