மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் நாளை மூடல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்தார்.

Update: 2024-04-20 02:50 GMT

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்தார்.


சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுபடி இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் செயல்படக்கூடாது. எனவே அன்றைய தினம் மாநகர பகுதியில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News