தருமபுரியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பு குறித்து கூட்டம்

தருமபுரியில் சமூகநலத்துறை, மாவட்ட சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-06 15:43 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சமூகநலத்துறை. மாவட்ட சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப. தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, 

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 2023 24 ஆம் நிதியாண்டிற்கான "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தினை இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயலாற்ற வேண்டுமெனவும், 

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடையே துறை வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, காவல் துறைக்கு என நிதி ஒதுக்கீடு துறை ரீதியாக பிரித்து வழங்கப்படும் என்றும் அதற்கான செயல் திட்ட அறிக்கையினை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கௌரவ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.காயத்ரி, வில்சன் ராஜசேகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.சாந்தி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News