திமுக வேட்பாளரை அறிமுகம் செய்யும் கூட்டம்

திமுக வேட்பாளரை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-24 13:42 GMT
செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூரில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் அவர்களை திமுக கட்சி நிர்வாகிகளிடம் அறிமுக செய்யும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பேசினார்.. இந்நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன்,காட்டாங்குளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளை சார்ந்த துணைஅமைப்பாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, அனைத்து கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News