மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிகொண்டா அருகே தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற மனம் நல பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-06-18 08:17 GMT

பைல் படம் 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மனைவி சுகாசினி (38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 9-ந் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்

. இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுகாசினியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சுகாசினியின் தாயார் சம்பூரணம் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News