அகள்ளக்குறிச்சியில் மினி மாரத்தான் போட்டி

கள்ளகுறிச்சியில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-01-12 10:23 GMT

மினி மாராத்தான்

கள்ளக்குறிச்சியில் இன்று விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடக்கிறது. கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு, தமிழ்நாடு அரசின் சார்பில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி வரும் 19ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கோயம்புத்துார், திருச்சி, மதுரை, சென்னை மாவட்டங்களில் நடக்கிறது. இப்போட்டி தொடர்பான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று 12ம் தேதி காலை 7:00 மணிக்கு கள்ளக்குறிச்சியில் நடக்கிறது. 5 கி.மீ., துார போட்டியில் 25 வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். போட்டி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News