சமத்துவப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

Update: 2024-01-16 02:41 GMT
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கழக நிர்வாகிகள் புடைசூழ புதுப் பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து கழக நிர்வாகிகளும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகம் வண்ண பொடிகளால் கோலமிடப்பட்டு கரும்பு மற்றும் மாவிலை தோரணங்களால் அலுவலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Tags:    

Similar News