நெய்வேலியில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆய்வு
By : King 24X7 News (B)
Update: 2023-11-14 11:56 GMT
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மழைநீரை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.