பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு. ஆய்வின் போது பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Update: 2024-02-01 10:18 GMT

பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது, இந்தப் பணிகளை இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின் போது பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News