நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

மஞ்சாடி குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை துவக்க அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-03-13 12:01 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் பாத்தம்பட்டி ஊராட்சி மஞ்சாடி குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Tags:    

Similar News