தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு அமைச்சர் நேரு பிரச்சாரம்

பீமநகர் பகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-03-31 11:13 GMT

வாக்கு சேகரித்த அமைச்சர் நேரு

தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக பீமா நகர் பகுதியில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது முதல் பிரச்சாரத்தை இன்று துவக்கினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே என் நேரு வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமை கட்சியின் நிர்வாகிகள்,

ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், மறுமலர்ச்சி திமுக தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மார்சிங்பேட்டை, ஒத்தக்கடை, பெரிய மிளகுபாறை, காமராஜபுரம் பொன்னகர், கருமண்டபம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து, தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு பொதுமக்களிடையே உரையாற்றினார்.

Tags:    

Similar News