மின்மாற்றியினை துவங்கி வைத்த அமைச்சர்!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை துவங்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

Update: 2024-03-06 11:47 GMT

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், திருநாளூர் ஊராட்சி, பேராட்சி குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News