அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு
சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 14:11 GMT
ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி வளாகத்திற்கு சென்று மாணவிகளிடம் பேசிய அவர் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவிகள் நன்றாக படிக்க வேண்டுமென்றும்
பொதுத் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டுமென்றும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அரசு அதிகாரிகள் பள்ளி மாணவிகள் என பலரும் உடனிந்தனர்.சங்ககிரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.