இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர்

குண்டடம் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் வழங்கினார்.

Update: 2024-01-11 15:13 GMT

வீட்டுமனை பட்டா வழங்கல் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கேயம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News