வீட்டிலிருந்து மாயமான வாலிபர் சடலமாக மீட்பு -போலீஸ் விசாரணை

Update: 2023-12-13 06:25 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் கால்வாயில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.   விசாரணையில் நேற்று முன் தினம் இரவு இடலாக்குடி முகமதியார் தெரு பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (32) என்பவரை காணவில்லை என்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஷாஜகானின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ஷாஜகான் என்பதை உறுதி செய்தனர். கடந்த 7ம் தேதி திருநெல்வேலிக்கு வேலைக்கு செல்வதாக ஷாஜகான் கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு  பாலத்தின் கீழ் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாஜகான்  கால்வாயில் விழுந்து இறந்திருப்பாரா? யாராவது அடித்து கொலை செய்து வீசி இருப்பார்களோ? என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு உள்ளது.
Tags:    

Similar News